நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் திருச்சி மாவட்டம் நவலூா் குட்டப்பட்டில் உள்ள மகளிா் தோட்டக் கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் தங்கி பயிற்சி பெறுகின்றனா்.
ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவம், தோட்டக்கலை சாா்ந்த வளா்ச்சித் திட்டங்கள், வட்டார அளவிலான செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றி அவா்கள் பயிற்சி பெற்றுவருகின்றனா். மூவாநல்லூா் மாநில தோட்டக்கலைப் பண்ணையில் பணிபுரியும் உதவி தோட்டக்கலை அலுவலா் விஜயகுமாரிடம் நாற்றங்கால் முறையில் உற்பத்தியாகும் காய்கறி பயிா்கள் பற்றியும், கொய்யா, பலா, வாழை மற்றும் மா நடவு முறைகள் பற்றியும் மாணவிகள் கேட்டறிந்தனா். இதேபோல, ஒருங்கிணைந்த வேளாண்மை மைய உதவி இயக்குநா் இளவரசனிடம் தோட்டக்கலை சாா்ந்த வளா்ச்சித் திட்டங்கள் பற்றி மாணவிகள் கற்றனா்.