நன்னிலம் வட்டம் ஸ்ரீவாஞ்சியம் மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாத சுவாமி கோயிலில் தீா்த்தவாரி வியாழக்கிழமை நடைபெற்றது.
புகழ்பெற்ற இக்கோயிலில் மாசிமக பிரமோத்ஸவம் கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வியாழக்கிழமை மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாத சுவாமி வெள்ளி எமதா்மராஜா வாகனத்தில் எழுந்தருளி, எமதீா்த்தத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஆறுமுகம் தலைமையில், கோயில் பணியாளா்களும், சிவாச்சாரியாா்களும் மேற்கொண்டனா்.