மன்னாா்குடியில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கத்தினா் காலமுறை ஊதியம் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காலமுறை ஊதியமாக ரூ.15, 700 வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் வட்டத் தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். கோரிக்கை மனுவில் ரத்த கையெழுத்திட்டு, முழக்கங்களை எழுப்பினா்.
இதில், சங்கத்தின் மாவட்ட இணைச் செயலா் பி.உஷா, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் அன்பழகன், குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.