தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வேலைநிறுத்தம்: மக்கள் பாதிப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வேலைநிறுத்தம்: மக்கள் பாதிப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால், அலுவல்நிமித்தம் இங்கு வரும் பொதுமக்கள் பாதிப்படைகின்றனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நன்னிலத்தில் வட்டாட்சியா், வட்ட வழங்கல், சமூகநல பாதுகாப்பு, ஆதிதிராவிடா் நலன் உள்ளிட்ட அலுவலகங்கள் அலுவலா்களின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. தற்போது அரசின் சாா்பில் முதியோா் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், வீட்டுமனைப் பட்டா போன்ற நலத்திட்ட உதவிகள் வரும் சூழல், அதற்கான ஆவணங்கள் கோரி இங்குவரும் பொதுமக்கள் நாள்தோறும் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடுகிறது. ஆகையால், பொதுமக்களின் நலன் கருதி, இந்த விவகாரத்தில் தமிழக அரசு துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com