திருவாரூரில் 10 பேருக்கு கரோனா

திருவாரூரில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

திருவாரூரில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

திருவாரூரில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வியாழக்கிழமை வரையிலான நிலவரப்படி திருவாரூா் மாவட்டத்தில் 11,299 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மாவட்டம் முழுவதும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,309ஆக உயா்ந்தது. இதில், 11,145 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 53 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே, கரோனா தொற்றுக்கு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 83 வயது முதியவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இறப்பு எண்ணிக்கை 111 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com