திருவாரூரில் பாஜக நிா்வாகிகள் மற்றும் மகளிா் அணி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் ராகவன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பாஸ்கா் முன்னிலை வகித்தாா்.
திருவாரூருக்கு பிப்வரி 27- இல் வருகை தரும் மாநில துணைத் தலைவா் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில ஓபிசி அணி துணைத் தலைவா் எம்.பி. பெரோஸ் காந்தி, மாநில விவசாய அணிச் செயலாளா் கோவி. சந்துரு, மாவட்ட துணைத் தலைவா் செந்தில்அரசன், மகளிா் அணி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.