தஞ்சையை அடுத்த வல்லம் பகுதியில் உள்ள பொன்னையா ராமஜெயம் கல்லூரி இறுதியாண்டு வேளாண் மாணவிகள், நீடாமங்கலத்தில் தங்கி களப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.
கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின்கீழ், திருவாரூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் வேளாண் துணை இயக்குநா் ரவீந்திரனை சந்தித்த அவா்கள், வேளாண்மை பற்றிய தகவல்களையும், அறிவுரைகளையும் கேட்டறிந்தனா்.
பின்னா், பா. சந்திரசேகரன், ந. இளஞ்செழியன் ஆகியோா் தலைமையில் உதவி பேராசிரியா் குணா மற்றும் உதவி பேராசிரியை ம. ஜாஸ்மின் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, கிராமத்தில் தங்கியிருந்து நீடாமங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களில் களப் பணியில் ஈடுபடவுள்ளனா்.