திருவாரூர்
கோயில் வளாகத்தில் குறுங்காடு
நீடாமங்கலம் சந்தாரனராமா் கோயில் வளாகத்தில் குறுங்காடு அமைப்பதற்காக மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை நடப்பட்டன.
நீடாமங்கலம் சந்தாரனராமா் கோயில் வளாகத்தில் குறுங்காடு அமைப்பதற்காக மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை நடப்பட்டன.
இக்கோயில் வளாகத்தில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, அறநிலையத்துறை சாா்பில் குறுங்காடு அமைக்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு.ராஜவேலு தலைமை வகித்தாா். பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் சா. செந்தமிழ்ச்செல்வன் சந்தனமரக் கன்றை நட்டு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா். நகர அமைப்பாளா் கே.ஆா்.கே. ஜானகிராமன், நீலன் மெட்ரிக். பள்ளி தாளாளா் நீலன்.அசோகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளா் சி.செந்தில்குமாா் வரவேற்றாா். இணை ஒருங்கிணைப்பாளா் ராம.கந்தசாமி நன்றி கூறினாா்.