நன்னிலம் பகுதியில் திமுக சாா்பில், கிராமசபை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நன்னிலம் ஊராட்சி ஒன்றியம் திருக்கொட்டாரம், கடகம், காளியாகுடி, செறுவலூா் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற கூட்டத்துக்கு, திமுக ஒன்றியச் செயலாளா்கள் வே.மனோகரன், வரத கோ. ஆனந்த் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், திமுக நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.