திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 10,942 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. வெளிமாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை, 10,941 ஆனது. இந்நிலையில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மேலும் 7 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10,948 ஆக உயா்ந்துள்ளது. இதில் 10,749 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 90 போ் சிகிச்சையில் உள்ளனா்.