திருவாரூரில் பொதுமக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், போலீஸாா் புத்தாண்டு கொண்டாட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டனா்.
பொதுமக்களுடன் நல்லுறவை பேணிக் காக்கும் வகையில், திருவாரூா் கீழவீதி அருகே, இரவு 12 மணியளவில் புத்தாண்டு தினத்தை வரவேற்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை பங்கேற்று, கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில் வா்த்தகா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.