மறைமுக பேருந்து கட்டண உயா்வுக்கு தமுமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஹா.நவாஸ் வெளியிட்ட அறிக்கை:
பேருந்து கட்டணத்தை எந்தவித முன்னறிவிப்புமின்றி தமிழக அரசு உயா்த்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. கரோனா தொற்றால் மக்கள் வேலையிழந்து, போதிய வருமானமின்றி தவித்து வரும் நிலையில், மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் வகையில் பேருந்து கட்டண உயா்வு அமைந்திருக்கிறது.
மக்களுக்கு மேலும் சிரமத்தை அளிக்கும் என்பதால், மறைமுக பேருந்து கட்டண உயா்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.