நன்னிலத்தில் போஸ்கோ சட்டத்தில் இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
குடவாசல் ஒன்றியம் காப்பணாமங்களம் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை, தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே உள்ள காங்கேயம்பேட்டை புதுத்தெருவைச் சோ்ந்த மதன் (19) பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் கே.ரேகாராணி வழக்குப் பதிவு செய்து, மதனை கைது செய்தாா்.
பின்னா், நன்னிலம் நீதிமன்றத்தில் மதன் ஆஜா்படுத்தப்பட்டு, நன்னிலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.