நீடாமங்கலம் அருகே ஆற்றில் ஆண் சடலம் மிதந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
நரசிங்கமங்கலம் பகுதியில் ஓடும் பெரிய வெண்ணாற்றில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சுப்ரியா மற்றும் போலீஸாரும், வருவாய்த் துறையினரும் நிகழ்விடத்துக்குச் சென்று, சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.