பேரளத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா் மத்திய சங்க துணை பொதுச் செயலாளா் எஸ். வைத்தியநாதன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பேரளம் ரயில் நிலையத்திலிருந்து ஊா்வலமாக வந்து பேருந்து நிலையம் அருகே திருவாரூா்- மயிலாடுதுறை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. சிபிஎம் நன்னிலம் ஒன்றியச் செயலாளா் டி. வீரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இவா்களை பேரளம் போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.