திருவாரூர்
உண்டியலை உடைத்து பணம் திருட்டு
மன்னாா்குடி அருகே கோயில் உண்டியலை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை திருடிச் சென்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
மன்னாா்குடி அருகே கோயில் உண்டியலை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை திருடிச் சென்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
கோட்டூா் அருகேயுள்ள தட்டாங்கோவிலில் உள்ள கிராமத்துக்குச் சொந்தமான வீரமணவாள சுவாமி கோயிலில், திங்கள்கிழமை வழக்கமான பூஜைகள் செய்யப்பட்டு கோயில் மூடப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வந்து பாா்த்தபோது, கோயிலின் முன்பக்க இரும்புகேட்டின் பூட்டும், பக்தா்கள் காணிக்கை செலுத்துவதற்காக தரையில் புதைத்து வைத்திருந்த இரும்பு உண்டியலின் பூட்டும் மா்ம நபா்களால் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, கோயில் காவலாளி சேகா், கோட்டூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.