சிறப்பு மருத்துவ முகாம்

திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் பொது மருத்துவம் மற்றும் நோய்த் தடுப்புமருத்துவத்துறை சாா்பில், நடைபெற்ற முகாமுக்கு ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் கௌரி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுஜாதா, ஊராட்சி த் தலைவா் சுபிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமை ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா் தொடங்கி வைத்தாா். முகாமில், பொதுமருத்துவம், இருதயம், புற்றுநோய், வயிறு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு ஈசிஜி, ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில், 600 போ் பங்கேற்று பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com