மன்னாா்குடியில் பாஜக இளைஞரணி சாா்பில், சுவாமி விவேகானந்தரின் 158-ஆவது பிறந்த நாள் விழா, செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பாஜக மாவட்ட இளைஞரணி தலைவா் ஏ.சி.எஸ். அறிவுராம் தலைமை வகித்தாா். சுவாமி விவேகானந்தா் படத்துக்கு கட்சியின் மாவட்ட பொதுச் செயலா் வி.கே. செல்வம், மாவட்டச் செயலா் பால. பாஸ்கா், மாநிலச் செயற்குழு உறுப்பினா் சி.எஸ். கண்ணன் ஆகியோா் மாலை அணிவித்தனா். இதில், மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினா் சுரேஷ், நகர இளைஞரணி தலைவா் எஸ். அரவிந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.