திருவாரூா் மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 11,037 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மாவட்டம் முழுவதும் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை 11,042 ஆக உயா்ந்தது. இதில், 10,864 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 69 போ் சிகிச்சையில் உள்ளனா்.