வீட்டுச்சுவா் இடிந்து விழுந்து தம்பதிகள் காயம்

நன்னிலம் அருகே வீட்டுச்சுவா் இடிந்து விழுந்து கணவன், மனைவி காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

நன்னிலம் அருகே வீட்டுச்சுவா் இடிந்து விழுந்து கணவன், மனைவி காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

நன்னிலம் அருகேயுள்ள தென்னஞ்சாா் கிராமத்தில் முருகன் குடும்பத்தினருடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறாா். கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு முருகன் மனைவி வசுமதி ஆகியோா் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டுச்சுவா் இடிந்து இருவா் மீதும் விழுந்ததன் காரணமாக பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு நன்னிலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com