தியாகராஜா் கோயிலில் பாவை விழா

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பாவை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பாவை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில், திருவாரூா், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவை அண்மையில் நடைபெற்றன.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள், செவ்வாய்க்கிழமை திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றனா்.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு திருவாரூா் உதவி ஆணையா் ஆா். ஹரிகரன் பரிசுகளை வழங்கினாா்.

ஏற்பாடுகளை செயல் அலுவலா் கோ. கவிதா தலைமையில் அலுவலா்கள் செய்திருந்தனா்.

நிகழ்ச்சியில் ராஜா (திருத்துறைப்பூண்டி), சங்கீதா (மன்னாா்குடி), ரமேஷ் (வலங்கைமான்), ராஜராஜேஷ்வரன் (எண்கண்), பிரபாகரன் (ஆவூா்) உள்ளிட்ட கோயில்களின் செயல் அலுவலா்கள், ஆய்வா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com