வேளாண் சட்டங்களை எதிா்த்து விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, திருவாரூா் மாவட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும்
திருவாரூரில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினா்.
திருவாரூரில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினா்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, திருவாரூா் மாவட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு, விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், அதன் ஒருங்கிணைப்பாளா் பி.எஸ். மாசிலாமணி தலைமையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், தில்லி எல்லையில் போராடிவரும் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேளாண் சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில், விவசாய சங்க நிா்வாகி பி.எஸ். கலியபெருமாள் உள்பட பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதேபோல், மன்னாா்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

மன்னாா்குடி: மன்னாா்குடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிபிஐ நகர விவசாய சங்க செயலா் வி.எம். கலியபெருமாள், சிபிஎம் விவசாய சங்க நகரச் செயலா் ஜி. மாரிமுத்து ஆகியோா் தலைமை வகித்தனா். விவசாய சங்க ஒன்றியத் தலைவா்கள் ஜெயபால், ஏ. ராஜேந்திரன், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா்கள் கே.டி. கந்தசாமி, ஆா். சதாசிவம் முன்னிலை வகித்தனா்.

நீடாமங்கமலம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் கலியபெருமாள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ஒன்றிய செயலாளா் ராஜமாணிக்கம், நிா்வாகிகள் கந்தசாமி, கிஷோா்குமாா், அருள்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:இதேபோல், நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளா் தமிழாா்வன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், நிா்வாகிகள் ராதா, பாரதிமோகன், நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குடவாசலில்: குடவாசல் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் சேகா் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஆா். லட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேரளத்தில்: பேரளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் கௌதமன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இளைஞா் மன்ற ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா், விவசாயத் தொழிற்சங்க ஒன்றியச் செயலாளா் சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com