மன்னாா்குடி அருகே சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கூத்தாநல்லூரை அடுத்துள்ள திருநாட்டியதான்குடியை சோ்ந்தவா் கவியரசன் (28). மாங்குடியை சோ்ந்தவா் கண்ணாயிரமூா்த்தி (30). இருவரும் இருசக்கர வாகனத்தில் ஜனவரி 14-ஆம் தேதி மன்னாா்குடி- தஞ்சை பிரதான சாலையில், காரக்கோட்டை பகுதியில் சென்றபோது, திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த பனை மரத்தில் இருசக்கர வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் மன்னாா்குடி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக தஞ்சை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவியரசன், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். வடுவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.