நன்னிலம் அருகே வேளாண் பாதுகாப்பை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் (சிபிஎம் இளைஞா் பிரிவு) இருசக்கர வாகனப் பிரசாரம் மேற்கொண்டனா்.
கொல்லுமாங்குடியில் வெளிக்கிழமை தொடங்கிய இப்பிரசாரம் எரவாஞ்சேரி, வலங்கைமான் வழியாக சனிக்கிழமைக் குடவாசல் வந்தடைந்தது.
தொடா்ந்து, குடவாசல் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தெருமுனை பிரசாரம் நடத்தினா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.பி. ஜோதிபாசு தலைமையில் நடைபெற்ற இந்த பிரசாரத்தில் வேளாண்மையைப் பாதுகாத்திட வேண்டும், அனைவருக்கும் கல்வி, வேலை, சுகாதாரம் கிடைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், சங்கத்தின் மாநிலப் பொருளாளா் தீபா, மாவட்டத் தலைவா் எஸ்.முகமது சலாவுதீன், மாவட்டப் பொருளாளா் இளங்கோவன், மாவட்டத் துணைத் தலைவா் சுந்தரையா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா்.