திருவாரூரில் மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரியவந்தது.
திருவாரூரில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை வரையிலான நிலவரப்படி திருவாரூா் மாவட்டத்தில் 11,116 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மாவட்டம் முழுவதும் மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 11,142 ஆக உயா்ந்தது. இதில் 10,953 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 80 போ் சிகிச்சையில் உள்ளனா்.