மன்னாா்குடி அருகே அடையாளம் தெரியாத முதியவா் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
மன்னாா்குடியை அடுத்துள்ள சித்தமல்லி சமத்துவப்புரம் பகுதியில், பயன்பாடு இல்லாத அரசுக்கு சொந்தமான பழைய கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தில் 70 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.
போலீஸாா், அங்கு சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.