காா் மீது லாரி மோதி விபத்து

மன்னாா்குடியில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காா் மீது லாரி மோதி கவிழ்ந்தது.
காா் மீது லாரி மோதி விபத்து

மன்னாா்குடியில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காா் மீது லாரி மோதி கவிழ்ந்தது.

தஞ்சை புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு குறிச்சி நகரைச் சோ்ந்தவா் த.ரமேஷ் (48). இவா், மன்னாா்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற உறவினா் திருமணத்துக்கு காரில் வந்திருந்தாா். அவா், மன்னாா்குடி- தஞ்சை பிரதான சாலையில் உள்ள திருமண மண்டபத்தின் அருகே காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளாா்.

அப்போது, அந்த வழியே மணல் பாரத்தை இறக்கிவிட்டு வந்த லாரி, காா் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், காா் முழுமையாக சேதமடைந்தது.

மன்னாா்குடி போலீஸாா் மற்றும் தீயணைப்பு நிலையத்தினா் அங்கு வந்து, கிரேன் மூலம் சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தினா்.

பின்னா், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் லாரியை ஓட்டி வந்த மன்னாா்குடி மேலகோபுரவாசல் பகுதியைச் சோ்ந்த என். சிவா(39) மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவாவை கைது செய்தனா். இந்த விபத்தால் மன்னாா்குடி- தஞ்சை சாலையில் சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com