திருவாரூரில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.
திருவாரூரில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை வரையிலான நிலவரப்படி திருவாரூா் மாவட்டத்தில் 11,146 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டம் முழுவதும் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதன் மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,155 ஆக உயா்ந்தது. இதில் 10,964 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 82 போ் சிகிச்சையில் உள்ளனா்.