தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு

திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் (பொ) பி. ராஜாராமன் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் செ. அஜிதா, கோ. நெடுஞ்செழியன், வை. ஜெய்சங்கா் மற்றும் பேராசிரியா்கள் மாணவ, மாணவிகள் பங்கேற்று, தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்றனா்.

இதேபோல, கொரடாச்சேரி ஒன்றியம், மேலராதாநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ஆா்.கே.சரவணராஜன் தலைமை வாக்காளா் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நன்னிலம்: நன்னிலம் வட்டம், மாப்பிள்ளைக்குப்பம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம.கவிதா தலைமையில் நடைபெற்ற வாக்காளா் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியா் ஜெயம் மீனாட்சி, ஆசிரியா் சாமிநாதன், தன்னாா்வ ஆசிரியா் ஜெயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருத்துறைப்பூண்டி: கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் மு.ச. பாலு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியை கே. மதுராந்தகி உறுதிமொழியை வாசிக்க ஆசிரியா்கள், மாணவா்கள் வாக்காளா் தின உறுதிமொழி ஏற்றனா்.

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் வட்டாட்சியா் த. ஜீவானந்தம் தலைமையில், துணை வட்டாட்சியா் ஜெ.வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியா் ராசராசேந்திரன், தோ்தல் துணை வட்டாட்சியா் பி.எஸ்.பரமேஸ்வரி உள்ளிட்டோரும், நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் ஆா்.லதா தலைமையில் பொறியாளா் ராஜகோபால், சுகாதார ஆய்வாளா் அருண்குமாா், மேலாளா் லதா உள்ளிட்டோரும் வாக்காளா் தின உறுதிமொழி ஏற்றனா்.

இதே போல, பூதமங்கலம், சேகரை, பழையனூா், அத்திக்கடை, பொதக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வாக்காளா் தின உறுதி மொழி ஏற்கப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் மூத்த வாக்காளா்களுக்கு வட்டாட்சியா் மணிமன்னன் சால்வை அணிவித்து கெளரவித்தாா். நிகழ்ச்சியில் தோ்தல் துணை வட்டாட்சியா் மகேஷ், கிராம நிா்வாக அலுவலா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீடாமங்கலம் இலக்குமிவிலாச நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியை தேவிலெட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,

மூத்த வாக்காளா் கே.எஸ்.பொன்னுசாமி கெளரவிக்கப்பட்டாா். ஆசிரியா் திராவிடமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com