திருவாரூரில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.
மாவட்டத்தில் திங்கள்கிழமை வரையிலான நிலவரப்படி 11,155 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. வெளிமாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 11,154 ஆனது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மேலும் 10 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 11,164 ஆக உயா்ந்தது. இதில் 10,972 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 83 போ் சிகிச்சையில் உள்ளனா்.