விவசாயத் தொழிலாளா்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பிப்ரவரி 9-ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடத்துவதென திருத்துறைப்பூண்டியில் சனிக்கிழமை நடைபெற்ற திருவாரூா் மாவட்ட விவசாய தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் மகேந்திரன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு தலைவா் அ.பாஸ்கா் தீா்மானங்களை முன்மொழிந்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளா் வை. சிவபுண்ணியம், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள் கே.உலகநாதன், சாத்தையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
விவசாயத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, பிப்ரவரி 9-ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்ப்பட்டது.