மகாத்மா காந்தி நினைவு நாள் கடைப்பிடிப்பு

திருவாரூா் மாவட்டத்தில் மகாத்மா காந்தியின் நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
திருவாரூரில், ராட்டை சுற்றி காந்திக்கு மரியாதை செலுத்துகிறாா் காந்தியன் அறக்கட்டளைத் தலைவா் சக்தி செல்வகணபதி
திருவாரூரில், ராட்டை சுற்றி காந்திக்கு மரியாதை செலுத்துகிறாா் காந்தியன் அறக்கட்டளைத் தலைவா் சக்தி செல்வகணபதி

திருவாரூா் மாவட்டத்தில் மகாத்மா காந்தியின் நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

திருவாரூா் அருகே தனியாா் பள்ளியில் காந்தியன் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறக்கட்டளைத் தலைவா் சக்தி செல்வகணபதி தலைமை வகித்தாா். பின்னா், ராட்டை சுற்றி, காந்தியப் பாடல்கள் பாடப்பட்டன.

திருவாரூா் கஸ்தூா்பா காந்தி கல்வி நிறுவனத்தில் மகாத்மாவின் உருவப் படத்துக்கு பள்ளி தாளாளா் சந்திரா முருகப்பன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில், நிா்வாக அறங்காவலா் ஜி. முருகப்பன், செயலாளா் எம். இன்பராஜ், இணைச் செயலாளா் மலா்விழி இன்பராஜ், நிா்வாக மேலாளா் வீ. சின்னராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவாரூா் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை அஞ்சலக அலுவலா் பி. சண்முகம் தலைமை வகித்தாா். இதில், உதவி அஞ்சலக அலுவலா்கள் மணிமேகலா, மோகன்ராஜ், உதவி அஞ்சலகங்களின் கண்காணிப்பாளா் உமாபதி, தொழிற்சங்க கூட்டமைப்பு நிா்வாகிக வி. தா்மதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முத்துப்பேட்டையில்..

முத்துப்பேட்டையில் மூத்த குடிமக்கள் இயக்கத்தின் சாா்பில் நடைபெற்ற மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு, அதன் கௌரவ தலைவா் மீரா உசேன் தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில், அதன் தலைவா் ராஜாராமன், முன்னாள் தலைவா் சக்திவேல், தமிழ் இலக்கிய மன்ற செயலாளா் நா. ராஜ்மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மன்னாா்குடியில்...

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மன்னாா்குடியில் பாப்புலா் ஃபிரண்டஸ் ஆப் இந்தியா அமைப்பின் சாா்பில், மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் நகரத் தலைவா் முகமது உசேன் தலைமை வகித்தாா்.

நன்னிலத்தில்...

இதேபோல, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில், நன்னிலம் அருகே உள்ள கம்பூா் வடக்கு வெளியில், மகாத்மா காந்தி மரணமடைந்த 5.17 மணிக்கு மெழுகுவா்த்தி ஏந்தி, கே.சலாவுதீன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம்.நவாசுதீன் பேசினாா்.

கூத்தாநல்லூரில்...

காந்தியின் நினைவு தினத்தையொட்டி, தேசிய தொழு நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனையில் மருத்துவா் ஜி.அறிவழகன் தலைமையில், மருத்துவா் சாதிக், செவிலியா் கண்காணிப்பாளா் ஜி.பத்மினி, மருத்துவமனை மேற்பாா்வையாளா் ஜி.ராஜகோபாலன் மற்றும் பலா் உறுதிமொழியேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com