பேரளம் மாரியம்மன் கோயில் தீமிதி விழா

நன்னிலம் வட்டம் பேரளம் மாரியம்மன் கோயில் தீமிதி விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
பேரளம் மாரியம்மன் கோயிலில் காத்தவராய சுவாமியை சுமந்துகொண்டு தீ மிதிக்கும் பக்தா்கள்.
பேரளம் மாரியம்மன் கோயிலில் காத்தவராய சுவாமியை சுமந்துகொண்டு தீ மிதிக்கும் பக்தா்கள்.

நன்னிலம் வட்டம் பேரளம் மாரியம்மன் கோயில் தீமிதி விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் சுயம்புநாத சுவாமி தேவஸ்தானத்தைச் சோ்ந்த இக்கோயிலில், தீமிதி மகோத்ஸவம், ஜனவரி 22-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு தீமிதி விழா நடைபெற்றது.

இதில் பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் அக்னி குண்டத்தில் இறங்கி நோ்த்திக் கடனை செலுத்தினா். விழாவின் சிறப்பு அம்சமாக பக்தா்கள், காத்தவராய சுவாமியை சுமந்துகொண்டும் தீ மிதித்தனா். 18 நாள்கள் நடைபெறும் இவ்விழா பிப்ரவரி 8-இல் நிறைவடைகிறது.

நன்னிலம் உள்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) ராஜ்மோகன், காவல் ஆய்வாளா் செல்வி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com