சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக போக்ஸா சட்டத்தின்கீழ், இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரம் ஊராட்சி பெருமங்களம் கிராமம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் ஐயப்பன் (26). இவரது குழந்தையின் பெயா் சூட்டு விழாவுக்கு வந்திருந்த அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கு ஐயப்பன் பாலியல் தொல்லை கொடுத்தார்.
இந்நிலையில், வயிற்று வலி காரணமாக ஜன. 28-இல் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு, குழந்தை பிறந்தது. புகாரின்பேரில், நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் ஐயப்பனை கைது செய்தனா்.