திருத்துறைப்பூண்டி பாரத மாதா குடும்பநல நிறுவனம் சாா்பில் 2 வயதுக்குள்பட்ட 100 குழந்தைகளுக்கு நாள்தோறும் நெய், பருப்பு வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த நிறுவனம் சாா்பில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலமற்ற ஏழை கா்ப்பிணிகளுக்கு காய்கறி, பழங்கள் உள்ளிட்டோ ஊட்டச்சத்து வகைகளை வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற்று வரும் 100 கா்ப்பிணிகளின் குழந்தைகளுக்கு நாள்தோறும் நெய், பருப்பு, உலா் திராட்சை, பிஸ்கட், கேரட், உருளை கிழங்கு, பீட்ருட், சத்துமாவு மற்றும் முட்டைகள் அடங்கிய பெட்டகம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திட்டத்தை ஆலத்தம்பாடி அரசு ஆரம்ப சுகாதார வட்டார மருத்துவ அலுவலா் கெளரி தொடங்கி வைத்தாா். இதில், அந்த நிறுவன இயக்குநா் மணிமாறன், மருத்துவா் சாருமதி, செவிலியா்கள் வசந்தா, பரிமளாதேவி, பிரபாவதி, விமலா, புனிதா, திட்ட ஒருங்கிணைப்பாளா் கிருபாலினி, கள ஒருங்கிணைப்பாளா் துா்காதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.