இருசக்கர வாகனம் மீதுலாரி மோதல்: கல்லூரி மாணவி உயிரிழப்பு
By DIN | Published On : 01st July 2021 09:27 AM | Last Updated : 01st July 2021 09:27 AM | அ+அ அ- |

திருவாரூா் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.
குளிக்கரை பகுதியைச் சோ்ந்தவா் அபிராமி (21). இவரது தோழி சினேகா (20). இருவரும் திருவாரூா் திரு.வி.க. கல்லூரியில் 3-ஆம் ஆண்டு மாணவிகள்.
இந்நிலையில், புதன்கிழமை அபிராமி தனது சகோதரா் முத்துக்குமாருடன் இருசக்கர வாகனத்தில் சினேகாவையும் அழைத்துக்கொண்டு கல்லூரிக்கு சென்றாா். நாகை தேசிய நெடுஞ்சாலையில் சீனிவாசபுரம் அருகே சென்றபோது, நாகையில் இருந்து வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், காயமடைந்த 3 பேரும் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபிராமி உயிரிழந்தாா்.
திருவாரூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான திருவாரூரைச் சோ்ந்த சக்திவேலை (49) கைது செய்தனா்.