மன்னாா்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சாா்பில் மன்னாா்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கோட்டாட்சியா் த. அழகா்சாமி தலைமை வகித்தாா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ். சந்திரமோகன் முன்னிலை வகித்தாா்.
மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா பங்கேற்று, 21 பேருக்கு செல்லிடப்பேசிகளும், 15 பேருக்கு மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரங்களும் என மொத்தம் ரூ.3,48,084 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மன்னாா்குடி வட்டாட்சியா் பா. தெய்வநாயகி, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் கோ. பூங்கொடி, மறுவாழ்வு மற்றும் பல்நோக்கு நிபுணா் சி. சித்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.