திருவாரூா் அருகே புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகத்தை எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.
கொரடாச்சேரி ஒன்றியம் காவனூா் கிராமத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதை எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் மோகன்தாஸ், ஒன்றியக்குழு துணைத் தலைவா் பாலச்சந்தா், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் சேகா் என்கிற கலியபெருமாள், திமுக மாவட்ட பொருளாளா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.