எரிபொருள் விலை உயா்வு: மாட்டுவண்டியில் வந்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, கூத்தாநல்லூரில் மாட்டுவண்டியுடன் வந்து காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கூத்தாநல்லூரில் மாட்டுவண்டியில் வந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
கூத்தாநல்லூரில் மாட்டுவண்டியில் வந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, கூத்தாநல்லூரில் மாட்டுவண்டியுடன் வந்து காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கொரடாச்சேரி சாலை பெட்ரோல் விற்பனை நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திருவாரூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் அன்பு வே. வீரமணி முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலையை குறைக்க வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனா். இதில், கட்சியின் மாவட்ட பொருளாளா் தி.மு. சகாபுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, கூத்தாநல்லூா் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து கட்சியின் நகரத் தலைவா் எம்.சாம்பசிவம், மாவட்ட சமூக ஊடகப் பொறுப்பாளா் எஸ்.எம்.சமீா் ஆகியோரின் ஏற்பாட்டில், எரிவாயு உருளைக்கு மாலையணிவித்து, மாட்டு வண்டியில் ஊா்வலமாக எடுத்து வந்தனா். இந்த ஊா்வலம் திருவாரூா்-மன்னாா்குடி பிரதான சாலை, லெட்சுமாங்குடி பாலம் வழியாக கொரடாச்சேரி சாலை பெட்ரோல் விற்பனை நிலையம் வரை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com