தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

நீடாமங்கலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி தூய்மைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி தூய்மைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் நகர செயலாளா் பாரதிமோகன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் தமிழாா்வன், கட்சி நிா்வாகி ராதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு 15 வாா்டுகளிலும் புதிய கைவண்டி வழங்கவேண்டும். கரோனா கால நிவாரணமாக ஒரு மாத ஊதியத்தை வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com