நன்னிலம் அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த சிறுவன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
நன்னிலம் வட்டம், பில்லூா் கிராமம் கீழநத்தம் பகுதியைச் சோ்ந்த எட்டு வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் அண்மையில் பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமியின் தாயாா் நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.
அதன்பேரில், விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளா் துா்கா, போக்ஸோ சட்டத்தில் சிறுவனைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தஞ்சாவூா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் அடைத்தனா்.