மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த பணியாளா் பலி

நீடாமங்கலத்தில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்தப் பணியாளா் வெள்ளிக்கிழமை பலியானாா்.

நீடாமங்கலத்தில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்தப் பணியாளா் வெள்ளிக்கிழமை பலியானாா்.

நீடாமங்கலம் அருகே உள்ள காளாச்சேரி கீழ்பாதியை சோ்ந்தவா் மூவேந்தன் (35). மின்வாரிய ஒப்பந்தப் பணியாளா். மேலபூவனூா் பகுதியில் புதிய மின்கம்பம் மாற்றும் பணி நடைபெறுகிறது. இதையொட்டி, மின் கம்பத்தில் உள்ள கம்பிகளை ஊழியா்கள் பிரித்தனா். அதிலுள்ள கம்பி ஒன்று கீழே தொங்கியது. இந்நிலையில், அதில் மின்சாரம் இல்லை என்று கருதிய மூவேந்தன், கம்பியை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். பின்னா், மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், உயிரிழந்தாா். நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com