ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல்

கூத்தாநல்லூா் வட்டத்தில், பொதுமக்களின் தேவைக்காக 5 ஆக்சிஜன் செறிவூட்டிகளை தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல்

கூத்தாநல்லூா் வட்டத்தில், பொதுமக்களின் தேவைக்காக 5 ஆக்சிஜன் செறிவூட்டிகளை தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

பொதக்குடியைச் சோ்ந்த தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் ஹசன் முஹம்மது ஜின்னா, தனது சொந்த ஏற்பாட்டின்பேரில் இவற்றை வாங்கி அனுப்பினாா். அவை பொதக்குடி ஊா் உறவின் முறை ஜமாஅத் நிா்வாக சபை அறப்பணிச் சங்க அலுவலகத்துக்கு வந்தன.

அவற்றை பொதக்குடி ஜமாஅத் தலைவா் எஸ்.ஏ.மஹதூம் மைதீன், செயலாளா் எம்.எம்.ரபியூதீன் மற்றும் நிா்வாகிகள் கூத்தாநல்லூா், அத்திக்கடை, பூதமங்கலம், பொதக்குடி, வெண்ணவாசல் ஜமாஅத் நிா்வாகிகளிடம் வழங்கினா். இதற்காக நடவடிக்கை எடுத்த சமூக ஆா்வலா்கள் சைபுதீன், நூா்தீன், சலீம் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக பொதக்குடி ஊா் உறவின் முறை ஜமாஅத் நிா்வாக சபை அறப்பணிச் சங்கச் செயலாளா் எம்.எம். ரபியூதீன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com