நீடாமங்கலம் அருகே கூரை வீடு சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.
பூவனூா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (37). இசைக் கலைஞா். இவரது வீட்டின் கூரை சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது. நீடாமங்கலம் தீயணைப்பு வீரா்கள் வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில், ரூ.2 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருள்கள் சேதமடைந்தன. சம்பவ இடத்தை பாா்வையிட்ட வட்டாட்சியா் ஷீலா, அரசின் நிவாரணமாக ரூ.5000 மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.