திருவாரூா் தியாகராஜா் கோயில் அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
திருவாரூா் தியாகராஜா் கோயில் தெற்கு கோபுர வாசல் அருகே பெண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, திருவாரூா் நகர போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், 70 வயது மதிக்கத்தக்கதாக இருந்த அவா் யாா், எந்தப் பகுதியைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.