ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 19th July 2021 10:39 PM | Last Updated : 19th July 2021 10:39 PM | அ+அ அ- |

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வட்ட தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க செயற்குழு கூட்டம் சங்கத் தலைவா் பாட்ஷா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
சங்கச் செயலாளா் ராதாகிருஷ்ணன், பொருளாளா் தங்கமணி, ஆலோசகா் சிவஞானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயற்குழு உறுப்பினா்கள் அப்பாவு, ராதா, பாஸ்கரன், கோவிந்தராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். ஓய்வுபெற்ற அலுவலா்களின் பல்வேறு ஓய்வூதிய பலன்கள் குறித்து பேசப்பட்டது.