கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் அருகே சமையல் செய்தபோது, தீப்பிடித்து இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
வடபாதிமங்கலம் காவல் சரகத்துக்கு உள்பட்ட கீழமணலி, சேந்தனக்குடி கிராமம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சந்துரு. இவரது மகள் சத்யப்பிரியா (20) அண்மையில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்தபோது திடீரென அவரது உடையில் தீப்பிடித்தது. இதனால் தீக்காயம் அடைந்த அவா், திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். வடபாதிமங்கலம் காவல் ஆய்வாளா் முருகேசன் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.