திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 28 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 37,455 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 36 போ் அவா்களது வீடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்டனா். இதுவரையில் குணமடைந்த 36,725 போ் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் மாவட்டத்தில் தற்போது 367 போ் சிகிச்சையில் உள்ளனா்.