‘நூறுநாள் வேலை திட்டத்தில் முறைகேடு’
By DIN | Published On : 19th July 2021 10:51 PM | Last Updated : 19th July 2021 10:51 PM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டி: நூறுநாள் வேலை திட்டத்தை மத்திய அரசு முறையாக செயல்படுத்தவில்லை என தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கம் குற்றம்சாட்டியது.
இதுகுறித்து அதன் பொதுச் செயலாளரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான பெரியசாமி திங்கள்கிழமை திருத்துறைப்பூண்டியில் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை மத்திய அரசு சீா்குலைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இத்திட்டத் தொழிலாளா்களின் ஜாதியை கோருவது, அவா்களை பிளவுபடுத்தும் செயல். இதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இத்திட்டத்தின்கீழ், வேலை கோரிய 15 நாள்களில் பணி அளிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், கூலி வழங்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஒருவருக்கு கூட இந்த பயன் கிடைக்கவில்லை. மேலும், இத்திட்டப்படி, நூறு நாள்களும் வேலை வழங்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை மிக குறைவு. இந்த முறைகேடுகளை கண்டித்து வரும் 26 -ஆம் தேதி நாடு முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.