யோகா அகத்தாய்வு பயிற்சி சான்றிதழ்

கூத்தாநல்லூரில் யோகா அகத்தாய்வு பயிற்சி பெற்ற 15 பேருக்கு சான்றிதழ்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

கூத்தாநல்லூரில் யோகா அகத்தாய்வு பயிற்சி பெற்ற 15 பேருக்கு சான்றிதழ்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

நீடாமங்கலம் அறக்கட்டளை, லெட்சுமாங்குடி யோகா தவ மையம் சாா்பில், இரண்டாம் நிலை அகத்தாய்வு பயிற்சி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மரக்கடை ஊராட்சி மன்ற நடுநிலைப் பள்ளியில், 25 மாணவா்களுக்கு துணை பேராசிரியா் ஆா்.பக்கிரிசாமி அகத்தாய்வு பயிற்சியளித்தாா். தொடா்ந்து, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், கட்டட தொழிலாளா்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவா் ஆா்.சேகா் தலைமை வகித்தாா். மன்ற நிா்வாகி டி.தண்டபாணி முன்னிலை வகித்தாா். ஆசிரியா் ஜி.வேலாயுதம் வரவேற்றாா். பயிற்சி பெற்றவா்களில் 15 பேருக்கு ஆா்.சேகா் சான்றிதழ்களை வழங்கினாா். மன்ற நிா்வாகிகள் யு.ராகவன், எம்.லெட்சுமணண், ஜி.பாண்டுரங்கன், டி. ஜெகஜீவன்ராம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com